போட்டியிட அனுமதியுங்கள்... பிரதமருக்கு முதல்வர் மம்தா கோரிக்கை

புதுடெல்லி : அனுமதிக்க வேண்டும்... ஐசிசி தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கங்குலி மிகவும் பிரபலமான நபர்.

இந்திய அணியின் கேப்டனும் கூட. சவுரவ் கங்குலி மேற்கு வங்காளத்தின் பெருமை மட்டுமல்ல. அவர் இந்தியாவின் பெருமையும் கூட.

அவர் ஏன் இவ்வளவு அநியாயமாக ஒதுக்கப்பட்டார்? கங்குலி மீது கவனம் செலுத்தி அவரை ஐசிசி தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.