பிலிக்குண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு

சேலம் : காவிரி நுழையும் இடமான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவு உபரி நீர் திறக்கப்பட்டது.

மேலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டு, நாட்ராபாளையம் உள்ளிட்ட தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த தண்ணீர் காவிரி நுழையும் இடமான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலை வந்தடைந்தது.

இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடகா மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஒகேனக்கல்லுக்கு 98,000 அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது.

அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 75,000 கன அடி தண்ணீர் வந்தது. தண்ணீர் வரத்து குறைந்தாலும் மெயின் அருவி, இந்தருவி, சீனி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், காவிரி ஆற்றில் யாரும் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.


ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள், செடிகள் உள்ளன. காவிரி நுழையும் இடமான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.