நெறிமுறைகளை மீறும் மாணவர்களை தண்டிக்க புதிய விதி

பல்கலைக்கழகம் பரிசீலனை... பொதுச் சுகாதார நெறிமுறைகளை மீறும் மாணவர்களை தண்டிப்பதற்கான புதிய விதியை கொண்டுவருவதற்கு, குயின்ஸ் பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது.

பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டங்களை நடத்தும் மக்களுக்கு கிங்ஸ்டன் பொலிஸார் ஏராளமான அபராதம் விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அசாம்பாவிதத்தை ஏற்படுத்தும் விருந்துகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு அபராதம் 500 டொலரிலிருந்து 2000 டொலராக நகரம் உயர்த்தியுள்ளது.

கொவிட்-19 பரவுவதைத் தடுக்க குயின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகின்றது.