கலந்தாய்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் குறித்த அறிவிப்பு

சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் இளங்கலை வேளாண் (B.Sc., (Hons) Agriculture) பட்டப்படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 250 இடங்கள் உள்ளன. இதே போல் இப்படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு சுயநிதி ஒதுக்கீட்டில் 350 இடங்களும் உள்ளன.

இதே போன்று தோட்டக்கலை (B.Sc., (Hons)) Horticulture பட்ட படிப்புகளில் 100 இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் படிப்பதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து தற்போது தகுதியான மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 6 -12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தனியாக தற்காலிக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து மாணவர்கள் இணையவழியில் கலந்தாய்வு மேற்கொள்ளவதற்கான கட்டணத்தை வருகிற ஜனவரி 2ம் தேதி வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற விரும்பும் மாணவர்கள்http://www.annamalaiuniversity.ac.in/என்ற இணையதளத்தை பார்வையிடவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.