இங்கு வரும் நவ.30 பொது விடுமுறை

தெலுங்கானா : தேர்தலை முன்னிட்டு நவம்பர் 30ஆம் தேதி அன்று பொது விடுமுறை அறிவித்தது மாநில அரசு ....நவம்பர் மாதம் நாட்டில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 33 மாவட்டங்களில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வருகிற நவம்பர் 30ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் பொது விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்து மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டு உள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது வருகிற டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.