சீக்கியர் படுகொலை குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன்

புதுடில்லி: சீக்கியர் படுகொலை குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்க மத்திய அரசு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது.

இது தொடர்பான வழக்கை நம்பகத்தன்மையுடன் விசாரித்து, மத விரோதம் காரணமாக அச்சத்துடன் வாழும் சீக்கிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாகிஸ்தானுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்மோகன்சிங் என்ற 34 வயது சீக்கியர் ஒருவர் அண்மையில் ஆட்டோவில் வீடு திரும்பும் போது சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.