ஆதரவற்றோருக்கு உணவுப்பொட்டலம் வழங்கிய காவல்துறை அதிகாரி

காவல் துறை அதிகாரியின் செயல் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

திண்டுக்கல்லில் சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு, காவல்துறை அதிகாரி ஒருவர் பிரியாணி வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நகர துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர் தீபாவளி பண்டிகையை ஒட்டி இன்று நகரில் சாலையோரம் வசித்து வரும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கினார்.

இதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டு உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள் ஈரம் உண்டு என்பதைப் போல, துணை கண்காணிப்பாளரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.