இந்த பகுதிகளில் மின் விநியோகம் தடை ... மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இங்கே காண்போம்.
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை பயனர்களுக்கு வழங்கும் நோக்கில் மாதந்தோறும் மின் வாரியம் அனைத்து மாவட்ட துணை நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாளைய தினம் தமிழகத்தில் சில பகுதிகளில் மின் தடை செய்யப்படவுள்ளது

மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :

அன்னூர்:

கரியாம்பாளையம், தெலுங்குபாளையம், கெம்பநாயக்கன்பாளையம்
கருவலூர்:

முறியாண்டாம்பாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலும்

இதனை அடுத்து புதுக்கோட்டை:

பழைய கந்தர்வக்கோட்டை, மெய்க்குடிப்பட்டி, துருசு பட்டி, அரியாணிப்பட்டி, அரசம்பட்டி, புதுப்பட்டி, பாகட்டுவன்பட்டி, கொத்தப்பட்டி, புதுநகர், பல்லவராயன்பட்டி, வீரடிப்பட்டி, சிவந்தன்பட்டி, ஆதனக்கோட்டை, வரப்பூர், மின்னத்தூர், ஆண்ட குளம், மங்கள கோயில்
தேவம்பட்டு:

அகரம், ராக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.