வருகிற 28ம் தேதி திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி : எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப திருநெல்வேலி அருகே அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளார்கள். இந்த முகாம் வருகிற 28ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற இருக்கிறது.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் இது சம்மந்தப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மையம் சாா்பாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் முதுகலை பட்டம் பெற்றவர்களும் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இளங்கலை, முதுகலை படிப்பில் இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளும் முகாமில் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.

இதனை அடுத்து இந்த முகாம் மூலமாக எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்கள் நிறுவனத்திற்கு தகுதியான நபர்களை எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறை வாயிலாக தேர்வு செய்ய உள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.18000 முதல் மாத சம்பளமாக வழங்கப்படும். இது தொடர்பான மேலும் கூடுதல் தகவல்களை பெற 9994464607 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.