இன்று இந்த 7 மாவட்டங்களை குளிர்விக்க போகுது மழை

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் இன்று 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் நடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதையடுத்து அக்கினி நட்சத்திரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மெல்ல மெல்ல வெயில் குறைந்து கொண்டு வருகிறது. மண்ணை குளிர்விக்கும் விதமாக ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டு வருகிறது.

தற்போது வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, வளிமண்டல சுழற்சி காரணமாகஇன்று இந்த 7 மாவட்டங்களில் மழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அதன்படி கிரிஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.