அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறுவது பொய்

சென்னை: அவர் சொல்வது அனைத்தும் பொய்... அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சசிகலா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுனாமி நினைவுத் தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஜெயக்குமார், பின்னர் பைபர் படகில் சென்று கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பண்ருட்டி ராமச்சந்திரனை திமுகவின் பி டீமாக பார்ப்பதாக விமர்சித்தார்.

மேலும் அதிமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சசிகலா கூறுவது குறித்த கேள்விக்கு அது ஜமுகாளத்தில் வடிக்கட்டிய பொய் என்று தெரிவித்தார்.