இலங்கையில் பேருந்து கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கை: பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30 ரூபாயாக குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு, போக்குவரத்து அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் குறைக்கப்படவுள்ள ஏனைய பேருந்து கட்டணங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.