உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு... தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி

சென்னை: தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி... ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழர்களுக்கும், அதிமுகவிற்கும் கிடைத்த வெற்றி என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு வெளியானதும், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சந்தித்தார்.

அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது வழக்கு தொடரப்பட்டதால் ஓபிஎஸ் என்ற தனி நபருக்கு இந்த தீர்ப்பின் எந்த கிரிடிட்டும் கிடையாது.

ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழர்களுக்கும், அதிமுகவிற்கும் கிடைத்த வெற்றி என கூறினார்.