இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆகரித்துள்ளது.
நேற்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள். மொத்தம் 866 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக நேற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:- அரியலூர் - 08 சென்னை - 1654 செங்கல்பட்டு -131 கோவை - 22 கடலூர் - 41 தருமபுரி - 01 திண்டுக்கல் - 13 ஈரோடு - 04 கள்ளக்குறிச்சி - 18 காஞ்சிபுரம் - 66 கன்னியாகுமரி - 22 கரூர் - 09 கிருஷ்ணகிரி - 03 மதுரை- 97 நாகப்பட்டினம்- 62 நாமக்கல் - 01 நீலகிரி - 02 பெரம்பலூர் - 05 புதுக்கோட்டை - 13 ராமநாதபுரம் - 01 ராணிப்பேட்டை - 02 சேலம் - 48 சிவகங்கை - 15 தென்காசி -05 தஞ்சாவூர் - 15 தேனி - 81 திருப்பத்தூர் - 11 திருவள்ளூர் - 87 திருவண்ணமலை - 52 திருவாரூர் - 31 தூத்துக்குடி - 49 திருநெல்வேலி - 32 திருப்பூர் - 01 திருச்சி - 76 வேலூர் - 51 விழுப்புரம் - 34 விருதுநகர் - 40