தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சக்கட்ட அளவில் பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,299 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 21வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டம் வாரியாக நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:- அரியலூர் 37 செங்கல்பட்டு 419 சென்னை 1299 கோயம்புத்தூர் 189 கடலூர் 91 தருமபுரி 363 திண்டுக்கல் 80 ஈரோடு 25 கள்ளக்குறிச்சி 179 காஞ்சிபுரம் 349 கன்னியாகுமரி 266 கரூர் 5 கிருஷ்ணகிரி 82 மதுரை 326 நாகப்பட்டினம் 46 நாமக்கல் 28 நீலகிரி 34 பெரம்பலூர் 16 புதுக்கோட்டை 95 ராமநாதபுரம் 72 ராணிப்பேட்டை 222 சேலம் 122 சிவகங்கை 82 தென்காசி 93 தஞ்சாவூர் 186 தேனி 234 திருப்பத்தூர் 56 திருவள்ளூர் 378 திருவண்ணாமலை 134 திருவாரூர் 96 தூத்துக்குடி 313 திருநெல்வேலி 171 திருப்பூர் 18 திருச்சி 217 வேலூர் 174 விழுப்புரம் 164 விருதுநகர் 424