நீண்ட வரிசையில் நின்று பீலேவுக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

பிரேசில்: நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி... பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் .

கால்பந்து விளையாட்டின் பிதாமகன் ஆன பீலே உடல் நலம் நலிவுற்று மரணம் அடைந்தார். பிரேசில் மட்டும் அல்லாது உலகின் பல நாடுகளில் உள்ள கால்பந்து ரசிகர்களும் அவரது மரணத்தால் சோகத்தில் ஆழ்ந்தனர்.

பீலேவின் உடல் சான்டோஸ் நகரில் உள்ள மைதானத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரண்ட ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று மலர் வளையம் மற்றும் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கால்பந்தாட்டத்தின் ஜாம்பவானாக இருந்து வந்த பீலே உடல்நலம் சரியின்றி இருந்தபோதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்ததும் குறிப்பிடத்தக்கது.