இரு இளைஞர்கள் கைது... திருகோணமலை சம்பூரில் வெடிபொருட்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 22 மற்றும் 31 வயதான இருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளனர். விற்பனை செய்வதற்குத் தயார் நிலையில்
வைக்கப்பட்டிருந்த 17 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள்
சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார்
தெரிவித்தனர்.
இதேவேளை, கைதான இரு சந்தேகநபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.