கொய்னு புயல் தைவானைத் தாக்கியது... கட்டிடங்களின் கூரைகள் பறந்தன

தைபே: புயலால் பாதிப்பு... கொய்னு புயல் தைவானைத் தாக்கியது. ஆர்க்கிட் தீவில் சூறாவளியால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் கூரைகள் மற்றும் ஜன்னல்கள் அடித்துச் செல்லப்பட்டன.

தைவானை கொய்னு புயல் தாக்கியது. இதனால் கட்டிடங்களின் மேற்கூரைகள் பிய்த்து கொண்டு சென்றன. மேலும் மக்களை வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் இந்த புயலால் படகுகளும் சேதமடைந்தது. ஒருவர் சூறாவளியில் இறந்தார். 300 பேர் காயமடைந்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் சூறாவளி காரணமாக விமானம் மற்றும் படகு சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.