சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு

புதுடில்லி: முதல்நிலை தேர்வு... ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடந்தது.

1,105 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில் நடைபெறும் தேர்வில் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

காலை 9.30 முதல் 11.30 மணி வரை முதல் தாள் பொது அறிவுத் தேர்வும், பிற்பகலில் 2.30 மணி முதல் 4.30 மணி வரை திறனறி 2-ம் தாள் தேர்வும் நடந்தது.

தேர்வை முன்னிட்டு, மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மையங்களுக்குள் தேர்வர்கள் செல்போனை எடுத்துச்செல்லவும், பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்lது.