Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பழனி மலை ரோப்கார் பராமரிப்பு பணிக்காக 2 நாட்கள் நிறுத்தம்

பழனி மலை ரோப்கார் பராமரிப்பு பணிக்காக 2 நாட்கள் நிறுத்தம்

By: Nagaraj Mon, 24 Apr 2023 7:22:34 PM

பழனி மலை ரோப்கார் பராமரிப்பு பணிக்காக 2 நாட்கள் நிறுத்தம்

பழனி: 2 நாட்கள் இயங்காது... பழனி மலைக்கோயில் ரோப்காா் பராமரிப்புப் பணிக்காக அடுத்த இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது.

electric traction train,hill,palani,maintenance work,will be operated ,
மின் இழுவை ரயில், மலை, பழனி, பராமரிப்பு  பணி, இயக்கப்படும்

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் 2 நாளும், வருடத்தில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் ரோப்காா் நிறுத்தப்படுவதாக திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, பக்தா்கள் மின் இழுவை ரயில், படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Tags :
|
|