Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் கிரிவலம் ஏற்பாடு செய்யப்படுமா?..தேவஸ்தான அதிகாரி பதில்

திருப்பதியில் கிரிவலம் ஏற்பாடு செய்யப்படுமா?..தேவஸ்தான அதிகாரி பதில்

By: vaithegi Sat, 02 Dec 2023 2:28:02 PM

திருப்பதியில் கிரிவலம் ஏற்பாடு செய்யப்படுமா?..தேவஸ்தான அதிகாரி பதில்


திருமலை: கிரிவலம் சாத்தியமில்லை .... திருப்பதி ஏழுமலையான் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் மொத்தம் 24 பக்தர்கள் தேவஸ்தான அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினர். இதில் முக்கியமாக, ஆந்திர மாநிலம், சீபுருபல்லி பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவர், “திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல, திருப்பதியிலும் ஏழுமலையான் பக்தர்களுக்காக கிரிவலம் ஏற்பாடு செய்யப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

devasthan officer,krivalam,tirupati ,தேவஸ்தான அதிகாரி,கிரிவலம் ,திருப்பதி


இதற்கு நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி பதில் அளிக்கையில், “இது நல்ல யோசனை தான் ஆனால், பூகோள ரீதியாக இங்கு கிரிவலம் செல்ல முடியாது. அதற்கு சாத்தியமில்லை. என்றாலும் திருமலையில் ஏழுமலையான் கோயிலை சுற்றிலும் உள்ள ரிங் ரோட்டில் பக்தர்கள் ‘மகா பிரதட்சணம்’ செய்யலாம்” என பதில் அளித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் லட்டின் தரம் குறித்து பேசிய சிலர், அதில் சர்க்கரையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். கண் தான வங்கி திறக்க ஏற்பாடு செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

Tags :