- வீடு›
- ஆன்மீகம்›
- திருப்பதி ஏழுமலைக்கு செல்லும் பக்தர்களின் லக்கேஜ்களை பாதுகாப்பதற்காக புதிய டிஜிட்டல் முறையிலான ஏற்பாடு
திருப்பதி ஏழுமலைக்கு செல்லும் பக்தர்களின் லக்கேஜ்களை பாதுகாப்பதற்காக புதிய டிஜிட்டல் முறையிலான ஏற்பாடு
By: vaithegi Thu, 24 Aug 2023 4:06:57 PM
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த படியே இருந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் 2 , 3 நாட்கள் கூட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.
அந்த வகையில், தற்போது பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தின் சார்பில் முக்கிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, திருப்பதி ஏழுமலைக்கு செல்லும் பக்தர்களின் லக்கேஜ்களை பாதுகாப்பதற்கு வசதியாக பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து இதில் பக்தர்கள் தங்களது லக்கேஜ்கள், உடைமைகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை கொடுத்துவிட்டு செல்லலாம். சுவாமி தரிசனம் செய்த பின் பக்தர்கள் தங்களது உடைமைகளை மீட்டுக் கொள்ளும் படியாக புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, பக்தர்களின் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் அவர்களின் லக்கேஜ் மற்றும் மொபைல் போன்கள் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், எந்த காரணம் கொண்டும் பக்தர்களின் உடைமை தொலைந்து போக வாய்ப்பில்லை எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பக்தர்கள் தங்களுக்கான உடைமைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.