Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆனி மாத பௌர்ணமி பூஜை .. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை

ஆனி மாத பௌர்ணமி பூஜை .. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை

By: vaithegi Mon, 03 July 2023 11:37:49 AM

ஆனி மாத பௌர்ணமி பூஜை .. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை

விருதுநகர் :ஆனி மாத பௌர்ணமி பூஜை ,குருபூர்ணிமா குவியும் பக்தர்கள்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் அமைந்து உள்ளது. இக்கோவிலுக்கு பொதுவாக அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என்று முக்கிய விசேஷ நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

அந்தவகையில், ஆனி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி சிறப்பு பூஜைக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஜூலை 1ஆம் தேதி முதல் நாளை (4 ஆம் தேதி) வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர்.

devotees,full moon puja of ani month ,பக்தர்கள் ,ஆனி மாத பௌர்ணமி பூஜை


இதையடுத்து பக்தர்கள் காலை 6.30 மணிக்கு மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீர் ஓடை பகுதிகளில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது . மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்து உள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை கிடையது.

மேலும் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஆனி மாத பௌர்ணமி மற்றும் குருபூர்ணிமா கொண்டாடப்படுவதால் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து கொண்டு வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

Tags :