Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்!!!

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்!!!

By: Nagaraj Mon, 20 June 2022 7:54:26 PM

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்!!!

சென்னை: ஒவ்வொரு மனிதருக்குமே தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்கிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். சில பேருக்கு இந்த ஆசை தன்னுடைய சொந்த ஊரிலேயே நிறைவேற வேண்டும் என்று நினைப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் நாம் நினைத்த இடத்தில் வீடு வாங்குவது நிலம் வாங்குவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

நீங்கள் நினைத்த இடத்தில் நினைத்த மாதிரியே சொந்த வீடு அமைய முருகப்பெருமானை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். செவ்வாய் கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறைக்கு சென்று முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு செவ்வரளி பூ அல்லது முல்லை பூ வாங்கி சாத்திவிட்டு, ஒரு தாம்பாளத் தட்டில் 6 வெற்றிலைகளை அடுக்கி வைத்து, அந்த வெற்றிக்கு மேல் ஒவ்வொரு மண் அகல் விளக்குகளை வைக்க வேண்டும். 6 வெற்றிலைக்கு மேலே, 6 மண் அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிடுங்கள்.

இந்த தீபச்சுடர் முருகப்பெருமானை பார்த்தவாறு ஒளிர வேண்டும். அப்படி இல்லை என்றால் வட்டமாகவும் தீபங்களை அடுக்கி வைத்து ஏற்றலாம். அதன் பின்பு நீங்கள் பூஜை அறையில் அமர்ந்து கந்த குரு கவசத்தை படிக்கவேண்டும். படிக்க முடியாது என்பவர்கள், கந்த குரு கவசத்தை ஒலிக்கவிட்டு கேட்கலாம். அதன் பின்பு பூஜை அறையிலேயே அமர்ந்து உங்களுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி சொந்தவீடு நீங்கள் நினைத்த இடத்தில், நீங்கள் நினைத்தபடியே வாங்கி விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

hope,worship,tuesday,dream,own home,worship ,நம்பிக்கை, பூஜை, செவ்வாய்க்கிழமை, கனவு, சொந்த வீடு, ஆராதனை

சொந்த வீடு அல்லது சொந்த நிலம் எனக்கு கிடைத்து விட்டது. நான் நினைத்தபடி, நான் கட்டிய வீட்டில் குடியேறி சந்தோஷமாக வாழ்வதாகவும் நினைத்துக் கொள்ளலாம். இது கற்பனைக் காட்சிதான் ஆனால் இது ஒரு நாள் நிச்சயம் நினைவாக போகின்றது. அதன்பின்பு ஒரு வெள்ளைக் காகிதத்தில் ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை 6 முறை எழுதி வையுங்கள். ஒரு நோட்டுப் புத்தகத்தை போட்டு தொடர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமையில் ‘ஓம் சரவண பவ’ மந்திரத்தை எழுதினாலும் தவறு கிடையாது. அதன்பின்பு உங்களால் முடிந்த ஏதாவது ஒரு பழத்தை நிவேதனமாக வைத்து கூட, தீப தூப கற்பூர ஆராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து 21 செவ்வாய்க்கிழமை இந்த பூஜையை செய்து வர உங்களுடைய சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நினைவாகும். வீட்டில் பெண்கள் பூஜை செய்ய முடியாத நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஆண்களோ அல்லது உங்களுடைய பிள்ளைகளை இந்த பூஜையை செய்யலாம்.

பூஜை செய்வதற்கு வீட்டில் வேறு ஆட்களே இல்லை என்னும் பட்சத்தில் பூஜை செய்ய முடியாத வாரத்தை விட்டுவிட்டு அடுத்த வாரத்தில் இருந்து தொடர்ந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த பூஜையை செய்தால் ஜாதக கட்டத்தில் நிலம், வீடு வாங்கும் யோகம் இல்லாதவர்களுக்கு கூட அந்த யோகம் கைகூடி வரும் என்பதுதான் நம்பிக்கை.

Tags :
|
|