Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தெய்வங்களுக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

தெய்வங்களுக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

By: Nagaraj Thu, 16 June 2022 6:18:59 PM

தெய்வங்களுக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: சுவாமிகளுக்கு தீபம் ஏற்றுதல்... அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான திரி கொண்டு விளக்கு ஏற்றலாம். வீட்டில் மண், பித்தளை, வெள்ளி விளக்கு முதலியவற்றில் ஏற்றலாம். கடலை எண்ணெய் தீபம் ஏற்ற கூடாது. கடலை எண்ணெய் கொண்டு ஏற்றினால் சாபம் மற்றும் தோஷம் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தவிர்த்து விடுங்கள்.

தடைபட்ட திருமணம் கைக்கூட துர்க்கை அம்மன் கோவில்களில் இரண்டு விளக்கில் சிவப்பு வஸ்திரம் திரியாக செய்து விளக்கு ஏற்றலாம். பொதுவாக திருமணத் தடை, குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர புதிய வஸ்திரம் கொண்டு சிவப்பு திரி செய்து விளக்கு ஏற்றலாம். பெரும்பாலும் அம்மன் கோவில்களில், முருக பெருமான் கோவில்களில் இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் விரைவில் மாலை சூடுவதற்கு இறைவன் அருள் புரிவார்.

lamp,oil,loading,uses,lotus thread,yellow ,விளக்கு, எண்ணெய், ஏற்றுதல், பயன்கள், தாமரைத்தண்டு திரி, மஞ்சள்

தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் பூவின் காம்பால் அணைக்க வேண்டும். எவர்சில்வர் விளக்கை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். விளக்கெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் வைத்தும் விளக்கு ஏற்றலாம். தீபத்திற்கு பஞ்சு திரி ஏற்றுவது சிறப்பானது. புதுவெள்ளை வஸ்திரம், புது மஞ்சள், வாழைத்தண்டு நூல், தாமரைத்தண்டு திரி, ஆகியவை பயன்படுத்தலாம்.

அதிகாலை நேரத்திலும், மாலை சூரியன் அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். சுத்தமான நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் நினைத்த காரியங்கள் நடைபெறும். அனைத்து தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றலாம்.

Tags :
|
|
|