Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்குவதில் மாற்றம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்குவதில் மாற்றம்

By: vaithegi Sat, 25 Feb 2023 7:32:40 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வழங்குவதில் மாற்றம்

திருப்பதி: லட்டுகளை ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு .... திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாது வாங்கிச்செல்வது வழக்கமாகும்.

இதையடுத்து இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டு வருகிறது. இந்நிலையில், இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

lattu,tirupati yemumalai ,லட்டு , திருப்பதி ஏழுமலை

எனவே இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை போன்றவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனை அடுத்து 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் போன்ற விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

Tags :
|