Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம்

By: vaithegi Sun, 31 July 2022 4:05:12 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி நாளை தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடி பூரம் நட்சத்திரத்தில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெறும்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா காரணமாக கோவில் வளாகத்திற்குள் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வெகு விமரிசையாக ஏற்பாடுகள் நடந்து, கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடிப்பூர திருவிழாவை ஒட்டி சயன சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆண்டாள் மடியில், ரெங்கமன்னார் சயனித்திருக்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

chariot,andal temple,srivilliputhur ,தேரோட்டம் ,ஆண்டாள் கோவில்,ஸ்ரீவில்லிபுத்தூர்

மேலும் இதில் ஏராளமான மக்கள் தரிசனம் செய்தனர். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து பல பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 9.05 மணிக்கு தேர் திருவிழா தொடங்குகிறது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மான் ராஜ் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேரோட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இதை அடுத்து இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நகராட்சி நிர்வாகம் தேவையான அடிப்படை வசதிகள், முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் மதியம 1 மணி வரை போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

Tags :