Advertisement

திருச்செந்தூரில் வரும் செப். 13-ம் தேதி தேரோட்டம்

By: vaithegi Tue, 05 Sept 2023 12:13:32 PM

திருச்செந்தூரில் வரும் செப். 13-ம் தேதி தேரோட்டம்


தூத்துக்குடி: திருச்செந்தூரில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 13-ம் தேதி நடைபெற உள்ளது .. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து இந்த விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டத்தை வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக எடுத்து வந்தனர்.

chariot,thiruchendur ,தேரோட்டம்,திருச்செந்தூர்

அதனையடுத்து காலை 5.20 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக் உட்பட திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த விழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 13-ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

Tags :