Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • குளித்தலை அருகே தெலுங்குபட்டியில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை அருகே தெலுங்குபட்டியில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

By: Nagaraj Tue, 04 July 2023 11:16:28 AM

குளித்தலை அருகே தெலுங்குபட்டியில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை: குளித்தலை அருகே தெலுங்குபட்டியில் ஜக்காலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தெலுங்குப்பட்டியில் ஜக்காலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டு விழா நடைபெற்றது.

கஸ்தூரி ரெங்க வசகப்பு நாயக்கர் மந்தை சார்பில் நடைபெற்ற இந்த மாடு மாலை தாண்டும் விழாவில் கரூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 14 நாயக்கர் மந்தைகளை சேர்ந்த மந்தையர்களுக்கு வரவேற்பும், மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

herdsmen,victory,prizes,festival,sami darshan,public ,மந்தைதாரர்கள், வெற்றி, பரிசுகள், திருவிழா, சாமி தரிசனம், பொதுமக்கள்

அதனை தொடர்ந்து மாலை நடைபெற்ற மாலை தாண்டும் விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 14 மந்தையை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.

நாயக்கர் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் வந்த 3 மாடுகளின் மேல் கன்னி பெண்கள் 3 பேர் மஞ்சள் பொடியினை தூவி வரவேற்றனர். பின்னர் வெற்றி பெற்ற மாடு மந்தைதார்களுக்கு எலுமிச்சை கனி பரிசுகளும் வழங்கப்பட்டது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிழாவை கண்டு களித்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags :
|