திருப்பதியில் இந்த தேதிகளில் தரிசனம் ரத்து
By: vaithegi Thu, 20 Oct 2022 4:59:31 PM
திருப்பதி: இந்த தேதிகளில் தரிசனம் ரத்து .. திருப்பதியில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா முடிவடைந்த நிலையில் தற்போது வரவிருக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை மொத்தமாக 12 மணி நேரம் கோயில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு அக்டோபர் 24, 25ம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக 24ம் தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது
அதே போல 24ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 23ம் தேதியன்று பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும் அதனை தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம், ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடை தரிசனம் போன்றவற்றை முன்னிட்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினமும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.