Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • லட்டு கொண்டு செல்ல இனி ஓலைப் பெட்டிகள் விற்பனை செய்ய முடிவு

லட்டு கொண்டு செல்ல இனி ஓலைப் பெட்டிகள் விற்பனை செய்ய முடிவு

By: Nagaraj Sat, 25 Feb 2023 10:48:05 PM

லட்டு கொண்டு செல்ல இனி ஓலைப் பெட்டிகள் விற்பனை செய்ய முடிவு

திருப்பதி: பக்தர்கள் வாங்கி செல்லும் லட்டை கொண்டு செல்ல ஓலைப் பெட்டிகளை பக்தர்களுக்கு விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த லட்டினை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் வாங்கிச்செல்வது வழக்கமாகும். இந்த லட்டு பிரசாதம் வாங்கி செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இனிமேல் பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை பெட்டிகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

laddu,prasadam,tirupati, ,திருப்பதி, பிரசாதம், லட்டு

இதற்காக பனை மற்றும் தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

ரூ. 10, 15 மற்றும் 20 ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் மற்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags :
|