Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வெளிநாடு பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு செய்யப்படுகிறது என பக்தர்கள் குற்றச்சாட்டு

வெளிநாடு பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு செய்யப்படுகிறது என பக்தர்கள் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 02 Jan 2023 9:23:20 PM

வெளிநாடு பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு செய்யப்படுகிறது என பக்தர்கள் குற்றச்சாட்டு

கேரளா: வெளிநாடு பக்தர்களுக்கு உடனடி முன்பதிவு செய்யப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில், நடப்பாண்டு மண்டல சீசன் கடந்த மாதம் 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் 32 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்த 90,000 பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதுவரை உடனடி முன்பதிவு மூலமாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் தரிசனம் வரும் 14ம் தேதி நடக்கிறது.

crowd,reservation,sabarimala, ,சபரிமலை, மக்கள் கூட்டம், முன்பதிவு, பக்தர்கள்

மேலும் 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வரும் 8ம் தேதி வரை தினமும் 90,000 பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த நாட்களில் தரிசனம் செய்ய முன்பதிவு செய்ய முடியாது. சபரிமலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் இருந்து சில பக்தர்கள் முன்பதிவு இல்லாமல் வருகிறார்கள். அவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதாக திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இதனை தவிர்க்க வேண்டும் என்று ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
|