Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

By: Nagaraj Sun, 16 Apr 2023 3:31:14 PM

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

விருதுநகர்: பக்தர்களுக்கு அனுமதி வழங்கல்... சித்திரை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வருகிற 17 முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை, கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

devotees,permission,restrictions,temple,virudhunagar ,பக்தர்கள், அனுமதி, கட்டுப்பாடுகள், கோயில், விருதுநகர்

கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா்.

காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ, நீரோடைகளில் நீா் வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும். தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது.

Tags :
|