Advertisement

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் அனுமதி

By: vaithegi Thu, 02 Feb 2023 10:18:20 AM

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பக்தர்கள் யாரும் நீரோடை பகுதியில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை. கோவில் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் பக்தர்கள் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

devotees,chaturagiri sundara mahalinga swamy temple ,பக்தர்கள் ,சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில்

மேலும் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

இதனையடுத்து தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து கொண்டு வருகின்றனர்.

Tags :