சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
By: vaithegi Thu, 15 June 2023 09:41:52 AM
சென்னை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்து உள்ளது.
இதையடுத்து இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால் அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி; பிரதோஷம் மற்றும் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோட பகுதிகளில் இறங்கி குளிக்க கூடாது , இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை , தீப்பற்ற கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டுவரக் கூடாது என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.