Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதி கோயிலில் பக்தர்கள் காணிக்கை... உண்டியல் பணம் எண்ணும் பணி

திருப்பதி கோயிலில் பக்தர்கள் காணிக்கை... உண்டியல் பணம் எண்ணும் பணி

By: Nagaraj Tue, 07 Feb 2023 00:00:15 AM

திருப்பதி கோயிலில் பக்தர்கள் காணிக்கை... உண்டியல் பணம் எண்ணும் பணி


திருப்பதி: உண்டியல் காணிக்கை எண்ணும் பணி... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மரெட்டி கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியல் செலுத்திய பணத்தை எண்ணும் பணி பரகாமணி கட்டடத்தில் நேற்று காலை தொடங்கியது.

புதிய கட்டிடத்தில் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளதால், நேற்று முதல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது. கிரேன் மூலம் புதிய கட்டிடத்திற்கு உண்டியல்கள் கொண்டு வரப்பட்டது.

devotees,hundi,tirupati, ,உண்டியல், திருப்பதி, பக்தர்கள், காணிக்கை, தேவஸ்தானம்

ஒரு மாதத்திற்கு பிறகு கோவிலில் உள்ள பரகாமணி மண்டபம் பக்தர்கள் அமர்வதற்கு ஏற்றவாறு அமைக்கப்படும். முன்னதாக புதிய பரகாமணி கட்டிடத்தில் படத்திற்கு வாஸ்து ஹோமம், கோபூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

பக்தர்கள் அறைக்கு வெளியே இருந்து உண்டியல் எண்ணுவதைக் காணலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறுகின்றனர்.

Tags :
|