Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • தொடர் விடுமுறை ... 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

தொடர் விடுமுறை ... 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

By: vaithegi Sat, 13 Aug 2022 5:27:19 PM

தொடர் விடுமுறை ...  3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் மிகவும் அலைமோதுகிறது. இதை அடுத்து வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் கூட்டம் மிக அதிகமானதால் அறைகள் கிடைக்காமல் பெருமளவு பக்தர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கி கொண்டு வருகின்றனர்.

swami darshan,vacation,trip ,சுவாமி தரிசனம்,விடுமுறை ,திருப்பதி

மேலும் அதேபோன்று 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்திற்கு 5 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கின்றனர். மிக அதிக பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பக்தர்களுக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

இதை அடுத்து திருப்பதியில் கூட்டம் மிக அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்வதாக தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags :