Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

By: Nagaraj Mon, 24 July 2023 8:39:46 PM

பூலாம்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

பெரம்பலூர்: தீமிதி திருவிழா... ஸ்ரீதர்மராஜா திரெளபதி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பின்னர் மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

யாக வேள்வியில் 96 வகை மூலிகை திரவிய பொருட்கள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மஹாபூர் னா ஹீ தியும் தீபாரதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திரெளபதி அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

dimithi festival,neerthikkadan,mala,perambalur,devotees ,தீமிதி திருவிழா, நேர்த்திக்கடன், மாலை, பெரம்பலூர், பக்தர்கள்

மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பூலாம்பாடி கடம்பூர் பெரியம்மாபாளைம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ்ச்செல்வன்,வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஒருவருக்கு பின் ஒருவராக தீமித்தனர்.

Tags :
|