Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு... தேவஸ்தானம் அறிவிப்பு

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு... தேவஸ்தானம் அறிவிப்பு

By: Nagaraj Tue, 22 Nov 2022 7:31:21 PM

பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு... தேவஸ்தானம் அறிவிப்பு

சபரிமலை: சபரிமலை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே சமயத்தில் புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பணியை தொடங்கினார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது.

darshanam,ayyappan,temple,devotees,extension ,தரிசனம், அய்யப்பன், கோவில், பக்தர்கள், நீட்டிப்பு

ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு முழுமையாக நீக்கப்பட்டதால் 17-ந் தேதி முதல் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டு வருகிறது.இதையடுத்து இந்நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கும் நடைதிறக்கப்படும் என தேவசம் போர்டு தரப்பில் அறிவித்துள்ளது.

Tags :
|