Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் கண்நோய்கள் குணமாகும்

ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் கண்நோய்கள் குணமாகும்

By: Nagaraj Sat, 17 Sept 2022 10:16:57 AM

ஆவணி ஞாயிறு விரதம் இருந்தால் கண்நோய்கள் குணமாகும்

சென்னை: ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் நோய்கள் குணமாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. அதே போல் செல்வ வளம், பித்ரு தோஷமும் நீங்கும். சூரியன் ஒளி தரும் கடவுள் என்பதால் கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கண்டிப்பா செய்யுங்க.

சூரியனை வணங்குபவர்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், கண்நோய்கள், மஞ்சள் காமாலை, தோல்நோய்கள் போன்ற நோய்களும் குணமாகும். ஏழரைச்சனி, ஜென்மச்சனி, அஷ்டமச்சனி போன்ற பாதிப்புகளும் சூரியனை வழிபடுவதால் நீங்கும். சூரிய திசை, சூரிய புத்தியால் உண்டாகக்கூடிய தோஷங்களும் நீங்கும். நவக்கிரக தோஷத்தால் பாதிப்பு அடைந்தவர்களும் சூரியனை இந்த நாளில் வழிபாடு செய்யலாம்.

ஆவணி மாதத்தில சூரியன் சிம்ம வீட்டுல ஆட்சி செய்யுறாரு. சூரியனுக்கு இது பலமான வீடு. நமக்கு ஆத்ம பலத்தைத் தருபவரும் இவர் தான். ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் என்பது ரொம்ப ரொம்ப விசேஷமானது.

avani month,sunday,fasting,eye diseases,cure,superstition ,ஆவணி மாதம், ஞாயிற்றுகிழமை, விரதம், கண் நோய்கள், நீங்கும், ஐதீகம்

ஏன்னா ஞாயிறு என்றாலே சூரியனைத் தான் குறிக்கும். பொதுவாகவே ஆவணி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை சூரிய ஓரை தான் இருக்கும். ஆன்மிக அறிவுக்கும், தேக நலனுக்கும் சூரிய நமஸ்காரம் தான் கைகொடுக்கும். சூரிய நமஸ்காரப் பயிற்சியை செய்ய ஆரம்பிப்பவர்கள் இந்த நாளில் தொடங்கலாம்.


மருத்துவ ஜோதிடமோ சூரியன் லக்கனத்தில் அமைவது கண்களைப் பாதிக்கும் என்கிறது. சூரியன் மேஷ லக்கனத்தில் உச்சம் பெற்று இருந்ததுன்னு சொன்னா கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயோட வீடுங்கறதால கண்களில் உஷ்ணத்தால் எரிச்சல் வரும். சூரியன் சிம்மலக்கனத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும் என்கிறது ஜோதிடம்.

சூரியன் கடக லக்னத்தில் இருந்தால் கண்களில் பீழையும், நீரும் வடியும். கண்புரையும் ஏற்படும். சூரியன் துலாம் லக்கனத்தில் நீசம் பெற்று இருந்தால் பார்வை இழப்பே ஏற்படுமாம். சூரியனும் சந்திரனும் இணைந்து 2ம் வீட்டில் இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். இதுபோன்ற ஜாதகம் கொண்டவர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

Tags :
|
|