Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • இராஜகிரி தர்காவில் கந்தூரி விழா: திரளான இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

இராஜகிரி தர்காவில் கந்தூரி விழா: திரளான இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

By: Nagaraj Tue, 04 July 2023 11:15:39 AM

இராஜகிரி தர்காவில் கந்தூரி விழா: திரளான இஸ்லாமியர்கள் பிரார்த்தனை

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்கா கந்தூரி விழா நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள இராஜகிரி பீர் கைப் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனக்கூடு உரூசுடன் துவங்கிய நிகழ்ச்சியில், ஒலியுல்லாவிற்கு போர்வை போத்தப்பட்டும் மௌலூது சரிப் ஓதி, கொடியேற்றத்துடன் ரவ்லா சரீபீல் சந்தனம் பூசி இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

muslims,ganduri festival,participation,prayer,rajagiri ,இஸ்லாமியர்கள், கந்தூரி விழா, பங்கேற்பு, பிரார்த்தனை, இராஜகிரி

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தப்ரூக் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

கந்தூரி விழாவில் இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசல் பரிபாலன சபைத்தலைவர் யூசுப் அலி, செயலாளர் முகமது சுல்தான், துணை செயலாளர் சபீர் அகமது, ஒன்றிய கவுன்சிலர் அனீஸ் பாரூக், பாபநாசம் முன்னாள் கவுன்சிலர் முகமது காசிம் உறுப்பினர்கள் அபிப் முகமது, பீர் முகமது மற்றும் ஜமாத்தார்கள், அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர்.

Tags :
|