Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருப்பதியில் குடிமக்கள் மற்றும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் ஜாய்ரைடு சேவை துவக்கம்

திருப்பதியில் குடிமக்கள் மற்றும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் ஜாய்ரைடு சேவை துவக்கம்

By: vaithegi Mon, 23 Oct 2023 12:17:09 PM

திருப்பதியில் குடிமக்கள் மற்றும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் ஜாய்ரைடு சேவை துவக்கம்

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்து கொண்டே வருகிறது. அதிலும், அதிலும் குறிப்பாக பண்டிகை தினங்களில் 10 மணி நேரம் வரைக்கும் கூட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர்.

அந்த வகையில், பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் அவ்வப்போது பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. எனவே அதன் அடிப்படையில், தற்போது திருப்பதி வரும் பக்தர்கள் பயன் பெறும் வகையில் ஹெலிகாப்டர் ஜாய்ரைடு சேவை துவங்கப்பட்டு உள்ளது.

helicopter,tirupati,citizens and devotees ,ஹெலிகாப்டர் ,திருப்பதி, குடிமக்கள் மற்றும் பக்தர்


அதாவது, திருப்பதியிலிருக்கும் குடிமக்கள் மற்றும் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மலிவு விலையில் சவாரி செய்யும் படியாக சேவைகள் வழங்க இருப்பதாக ஏரோட்டான் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தலின் போது அரசியல் கூட்டங்களுக்கும் இந்த ஹெலிகாப்டரை வாடகை அடிப்படையில் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஆரம்பத்தில் பக்தர்களின் அவசர வசதிகளுக்காக ஏர் ஆம்புலன்ஸ்களாக இந்த ஹெலிகாப்டர் சேவைகளை பயன்படுத்தலாம் என்று திட்டமிட்ட நிலையில் தற்போது பக்தர்களுக்காக சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Tags :