Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வல்லம் ஏகௌரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்

வல்லம் ஏகௌரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்

By: Nagaraj Fri, 11 Aug 2023 8:15:22 PM

வல்லம் ஏகௌரியம்மன் கோயிலுக்கு பால்குடம் எடுத்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் பால்குடம் மற்றும் பல்வேறு காவடிகள் எடுத்து வழிப்பட்டனர்.

தஞ்சாவூர் நகரம் தோன்றுவதற்கு முன்பே வல்லம் தான் சோழர்களின் தலைநகராக விளங்கியது. அப்போது முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோயில்தான் வல்லம் ஏகௌரியம்மன் கோயில். சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும், வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகௌரியம்மன்.

சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகைச் சூடப் போர்க்களம் செல்லும் போதும் இந்தத் தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

devotees,festival,vallam,temple,milk tank ,பக்தர்கள், திருவிழா, வல்லம், கோயில், பால்குடம்

காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி நூற்றுக்கணக்கான வல்லம் பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள வஜ்ஜிரதீர்த்த குளத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

மேலும் பல பக்தர்கள் செடில்காவடி, பறவை காவடி எடுத்து வந்தனர். தொடர்ந்து கோயிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் வல்லம் பகுதியே திருவிழா கோலம் பூண்டிருந்தது.

Tags :
|
|