Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • அட்சய திருதிநாளில் என்னென்ன பொருட்கள் வாங்கினால் வளம் பெருகும்

அட்சய திருதிநாளில் என்னென்ன பொருட்கள் வாங்கினால் வளம் பெருகும்

By: vaithegi Mon, 17 Apr 2023 1:14:13 PM

அட்சய திருதிநாளில் என்னென்ன பொருட்கள் வாங்கினால் வளம் பெருகும்


சென்னை: இந்தாண்டு வருகிற ஏப்ரல் 22 மற்றும் 23ம் தேதிகளில் அட்சய திருதி ... பொதுவாக மாதந்தோறும் வளர்பிறை காலத்தில் 3-வது திதியாக திருதியை திதி வருவது வழக்கமாகும்.

இதில் சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்ததாக வரும் திருதியை ‘அட்சய திருதியை’ எனஅழைக்கிறோம். எனவே அதன்படி இந்த வருடத்தில் வருகிற 22 மற்றும் 23ம் தேதிகள் அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது.

இதனை அடுத்து இந்நாளில் தான் ஸ்ரீ மகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் நிரந்தரமாக இடம்பெற்றால் இந்நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் நிரந்தரமாக தங்கும் என்பது ஐதீகம்.

akshay trithi,goods,gold,silver ,அட்சய திருதி,பொருட்கள் , தங்கம், வெள்ளி

இருப்பினும் தற்போது தாறுமாறாக ஏறி இருக்கும் தங்கம் விலையை சாமானிய மக்களால் வாங்க முடியாது. அதனால் அட்சய திருதியை முன்னிட்டு வீட்டிற்கு தேவையான உப்பு, மஞ்சள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி வளம் பெறலாம்.

இதே போல, தெய்வப் படங்கள், மஞ்சள் வண்ண ஆடை, சங்கு, கனி வகைகள், பூஜைக்கு தேவையான பொருட்கள், சீர்வரிசை சாமான்கள், அகல்விளக்கு, எழுதுகோல், வெண்கல மணி, அடுப்பு, லட்சுமி படம், மணிபர்ஸ், பணப்பெட்டி, நெல்லிக்காய், சர்க்கரை வெல்லம் உள்ளிட்டவைகளை தங்களின் வசதிக்கேற்ப வாங்கி வைத்துக் கொண்டால் நிலையாக கிடைக்கும்.

Tags :
|
|