Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • கடந்த 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர்

கடந்த 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர்

By: vaithegi Thu, 12 Jan 2023 2:56:46 PM

கடந்த 11 நாட்களில் 7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தனர்

திருப்பதி : திருமலையில் அருள்பாலிக்கும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தைப் போல, மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

எனவே அதன்படி இந்தாண்டு ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினம் முதல் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் கோவிலில் உள்ள சொர்க்கவாசலில் பிரவேசம் செய்து செல்கின்றனர்.

tirupati,devotees ,திருப்பதி ,பக்தர்கள்

இதையடுத்து இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1 முதல் நேற்று வரை உண்டியல் காணிக்கையாக ரூ.42.88 கோடி கிடைத்திருக்கிறது. இந்த 11 நாட்களில் மட்டும் 7.08 லட்சம் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசித்துச் சென்றுள்ளனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் ஜனவரி 2ம் தேதி திறக்கப்பட்ட சொர்க்கவாசல் நேற்று நள்ளிரவு மூடப்பட்டது.

இந்த நாட்களில் 2.10 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2ம் தேதி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை 10 நாட்கள் 6.5 லட்சம் பேர் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்தனர்.

Tags :