பண வரவை அதிகரிக்க இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்
By: vaithegi Sun, 24 Sept 2023 8:06:01 PM
பணவரவை அதிகரிக்கும் பச்சை கற்பூரம் : பச்சை கற்பூரத்திற்கு தன ஆகர்ஷன சக்தி அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு தெய்வ ஆகர்சன சக்தியும் அதிகம் உண்டு. ஆகையால் தான் ஆலயங்களில் பச்சை கற்பூரத்தை எப்போதும் வைத்திருப்பார்கள். அப்படியான பச்சைக் கற்பூரத்துடன் இந்த பொருளை சேர்த்து நம்முடைய பர்சில் வைக்கும் போது பணம் நிறைவாக இருக்கும். இப்போது அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களாகட்டும் பெண்களாகட்டும் அனைவரும் மணிப்பர்ஸ் பயன்படுத்தும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். அப்படி பணம் வைக்கும் மணி பர்சில் பச்சைக் கற்பூரத்துடன் ஒரு ஏலக்காய் ஒரு கிராம்பு சேர்த்து வைக்கும் போது பணவரவு இருந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதே போன்று வீட்டில் பணம் வைக்கும் இடத்திலும் வைக்கலாம் அங்கும் தன ஆகர்ஷன சக்தி அதிகரிக்கும்.
இதைத் தவிர்த்து இன்னும் சில இடங்களிலும் இந்த பச்சை கற்பூரத்தை பயன்படுத்தும் பொழுது நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து பணவரவு பெருகும். வீட்டை சுத்தப்படுத்தும் போது அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் சேர்த்து துடைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகி பணவரவு அதிகரிக்கும்.
அதுமட்டுமின்றி பூஜை அறையில் சாமிக்கு வைக்கும் தீரத்தத்திலும் சிறிதளவு பச்சை கற்பூரம் கலந்து வைப்பது வீட்டில் இறை சக்தியை அதிகரிக்கும். அதே போல் பூஜை அறையை துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து துடைத்தால் பூஜை அறை எப்போதும் நிறைவான தெய்வ கடாட்சத்துடன் இருக்கும். சுவாமிக்கு படைக்கும் நெய்வேத்தியங்கள் சிலவற்றிலும் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து படைத்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
பச்சைக் கற்பூரத்தை பணம் வைக்கும் இடம், வியாபாரம், தொழில் ஸ்தாபனம் போன்ற பணவரவு இருக்கக் கூடிய இடங்கள், பணத்தை வைத்து புழங்கக் கூடிய இடத்தில், இறை சக்தியை அதிகரிக்க கூடிய இடங்களில் பயன்படுத்தும் போது பணவரவு தடையின்றி வந்து கொண்டே இருக்கும். எனவே நாம் அதனை உபயோகித்து பலன் பெறுவோமாக.