Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்

By: vaithegi Mon, 13 Nov 2023 10:00:55 AM

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம்


திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடு திருச்செந்தூர். இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இதையடுத்து இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் கூட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். திருச்செந்து முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா மிக வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்மான ஒன்று. இத்திருவிழாவின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள்.

ganda sashti festival,thiruchendur,lord muruga , கந்த சஷ்டி திருவிழா,திருச்செந்தூர்,முருகப்பெருமான்


இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. இன்று யாக சாலை பூஜையுடன் திருவிழா தொடங்குகிறது.

அதனை அடுத்து கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. கந்த சஷ்டி விழாவின் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து கோவில் நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Tags :