Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By: Nagaraj Tue, 28 Mar 2023 11:27:58 AM

சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சென்னை: சங்கடங்கள் தீர்க்கும் சங்கு வளையல் பற்றி தெரிந்து இருக்கிறீர்களா. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் பொதுவாகவே மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுபவர்கள்தான். பெண்களுக்கு இருக்கக்கூடிய சக்தியை மேலும் வலுப்படுத்த, பெண்கள் தங்களுடைய இரு கைகளில் இந்த வளையலை போட்டுக் கொண்டாலே போதும்.

கண்ணாடி வளையல்கள், தங்க வளையல்கள், பஞ்சலோக வளையல்கள், பித்தளை வளையல்கள் என்று பலவகையான உலோகங்களில் செய்யப்பட்ட வளையல் இருக்கத்தான் செய்கின்றது.

இவைகளையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக், ஃபைபர், மெட்டல், என்று பல ரகங்களில் வளையல்கள் வந்துவிட்டது. இருப்பினும் பெண்களுடைய கைகளுக்கு அழகு சேர்ப்பதோடு, லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கக்கூடிய ஒரு வளையலை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது சங்கு. மகாலட்சுமியின் பிறப்பிடம் பாற்கடல் என்பதால், பாற்கடலிலிருந்து எடுக்கக்கூடிய எல்லா பொருட்களிலும் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடலிலிருந்து எடுக்கப்பட்ட சங்கிலிருந்து செய்த வளையல்களை மகாலட்சுமி தன்னுடைய கையில் அணிந்து கொண்டிருப்பதாக வரலாறு சொல்கின்றது.

lord vishnu,shiva,kubera,conch bracelet,wealth and prosperity ,விஷ்ணு பகவான், சிவன், குபேரர், சங்கு வளையல், செல்வ செழிப்பு

வடமாநிலத்தவர்கள் இந்த சங்கு வளையல்களை தங்களுடைய பெண்களுக்கு சீதனமாக கொடுப்பார்களாம். பெண், புகுந்த வீட்டில் ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக. சங்கு வளைகளை எந்தப் பெண் தன்னுடைய கையில் அணிந்து கொண்டு இருக்கின்றாளோ, அந்த பெண்ணின் கைகள் அதிர்ஷ்டமான கைகளாக மாறி விடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண்களின் கையில் மகாலட்சுமி குடி கொள்வாள். இதுதான் அதற்கு அர்த்தம். சங்கு வளையல் அணிந்துகொண்டு நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு சங்கு வளையல் அணிந்து கொண்டிருக்கும் பெண், ஒருவர் நன்றாக வாழவேண்டும் என்று அவளுடைய கையால் ஆசீர்வாதம் செய்தால் அது உடனே பலிக்கும்.

சங்கு வளையலை கையில் அணிந்து கொண்டு அந்தக் கையால் ஒரு வியாபாரத்தைத் தொடங்கி வைத்தால் அந்த வியாபாரம் ஓஹோவென பெருகும். வறுமை இருக்கக்கூடிய இடத்தில் இந்த சங்கு வளையல்களை கொண்டுபோய் வைத்து பாருங்கள். அந்த இடம் கூடிய விரைவில் செல்வச்செழிப்பான இடமாக மாறிவிடும். சமையலறையில் அரிசி பானையின் இந்த சங்கு வளைகளை வைத்தால் காலத்திற்கும் சாப்பாட்டிற்கு பஞ்சம் வராது. இந்த சங்கு வெறும் மகாலட்சுமிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. விஷ்ணு பகவான், சிவன், குபேரர், இவர்களுக்கும் இந்த சங்கில் பங்கு உண்டு.

Tags :
|
|