கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் சீடை செய்முறை உங்களுக்காக!!!
By: Nagaraj Sat, 08 Aug 2020 11:05:49 AM
கம்சனை அழித்த கண்ணனை போற்றும் விதமாக அவன் பிறந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ரிஷ்ணாஷ்டமி, அஷ்டமி ரோகிணி என்று பல பெயர்களில் அழைப்பார்கள். இன்று கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த சீடை செய்முறை உங்களுக்காக.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 6 பங்கு (6 : 1)
உளுந்து மாவு - 1 பங்கு (வறுத்து பொடித்தது)
எள்ளு - 1 டி ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
வெண்ணெய் - 50 கிராம்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன் (ஊறவைத்தது)
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் உளுந்து மாவு, கடலை பருப்பு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம்,
போட்டு நன்றாக கலக்கவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும்.
மிகவும் தளர பிசைய வேண்டாம்.
ஒரு துணியில் சிறு சிறு உருண்டைகளாக
உருட்டிப் போடவும். உருண்டைகள் உலர்ந்தவுடன், அடுப்பில் எண்ணெய்யை காய
வைத்து எண்ணெய் கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு நிதானமான தீயில் வேக
வைத்து எடுக்கவும். வெந்த சீடை மிதந்து மேலே வரும்.
குறிப்பு:
அரிசி மாவு வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது அவசியம். கடையில் கிடைக்கும்
அரிசி மாவில் கண்ணுக்கு தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து
எண்ணெய் மேலே தெறிக்கும்.
உளுந்து ஒரே சீராக வறுத்து மாவாக
அரைத்துக் கொள்வது அவசியம். எண்ணெய் அதிக சூடாக இல்லாமல் இருப்பது நல்லது.
அவ்வாறு இருந்தால் அனைத்து சீடைகளும் வெடிக்கும், அல்லது உள்ளே வேகாமல்
வெளியே கருகி இருக்கும்.
சீடையை உருட்டும்போது அதிகம் அழுத்தாமல்,
கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். அப்படி உருட்டினால்
விரிசல் விடாது. இதனால் பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது. இவை
அனைத்தையும் மீறி உங்களுக்கு பயமாக இருந்தால், உருட்டிய மாவு எண்ணெய்
உள்ளே போட்டு, மேலே மூடியை மூடி வைத்து பொரிக்கவும்.