Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

By: Nagaraj Tue, 20 June 2023 9:09:05 PM

பிள்ளையார் பிடித்து வைப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: மூல முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கும் பொழுது அவருக்கு ஆறடியில் சிலை செய்து, பல ஆபரணங்களை அணிவித்து, அவரை மகிழ்விக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. ஒரு கைப்பிடி மஞ்சளை ஒரு குழந்தையின் கையால் பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார் தான்!

எந்த காரியத்தையும் விநாயகரை வணங்கி தொடங்குவது மரபு. எந்தெந்த பிள்ளையார் பிடித்து வைத்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்க்கலாம்.

மஞ்சள் பிள்ளையார்: நல்ல காரியங்களை தொடங்கும்போது, மங்களகரமாக நடைபெற, ஒரு கைப்பிடி மஞ்சளை, பிள்ளையாராக பிடித்து வைப்பது வழக்கம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும். காரிய சித்தி தருவார்.

குங்குமப் பிள்ளையார்: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.

Tags :